Tuesday, 8 January 2013

நன்றி !     நன்றி !!     நன்றி !!!


இறைவா உனக்கு நன்றி !

சுட்டெரித்தாலும்
உயிர் வாழ்ந்திட ஓர்
சூரியன் தந்தாய்

இருளில் நான் தவிக்கும்போது
இதயத்தை வருடிவிடும்
இரு நிலவுகள் தந்தாய்


நேற்றோ

தென்றலை நீ அனுப்பிவைத்தாய்
தேமதுரக் குரலில் அதைப் பாடவைத்தாய்
அலைகடலென துள்ளி ஆடவிட்டு
அளவில்லா ஆனந்தம் அள்ளித்தந்தாய்

மேகக் கூந்தலை புறந்தள்ளி
கண்சிரிக்கும் விண்மீனை அனுப்பிவைத்தாய்
சிநேக வெளிச்சத்தை வார்த்தைகளால்
சிந்தாமல் சிதறாமல் அள்ளித் 
தெளித்தாய்


இறைவா உனக்கு நன்றி !!

இயந்திர வாழ்வே இயல்பாகி மனம்அன்று
இடிந்திருந்த வேளை தனில்
இரக்கமாய் நீ பரிசளித்த
இந்த இனிமைமிகு அதிர்ச்சிக்காய்

இறைவா உனக்கே என்றென்றும் நன்றி !!!

3 comments:

  1. Wow... Super Uncle.. Thanks a lot... :

    ReplyDelete
  2. Awesome uncle...
    Thanks a lot:)
    If u publish a poem book, surely u ll get a big number of tamil lovers as fans uncle...
    Keep Rocking...

    ReplyDelete
  3. Wow! Superb..!! :)Keep writing :)

    ReplyDelete