Tuesday, 1 October 2013



கவிமதி

மேகங்கள் இடைப் படலாம்
மின்னலால் தடைப் படலாம்
கவின்மிகு நிலவதனை
கண நேரம் தவிர்த்திடலாம்
கார்முகிலை புறந்தள்ளி
களிப்புடனே முகம்காட்டும்-இனி
கவிதைநிலா இணையத்திலே!

இரவின் இருளினிலே
இனிமை தரும் நிலவு
துன்பக் கடலினிலே
தோணியாய் துணை நிலவு!
சந்தோச தருணங்களில்
சங்கீதமாய் கானம்பாடி
எங்கிருந்தாலும் என்னுடனே
இணைந்துவரும் குளிர்நிலவு!
இனிஎன்றும் பிரிந்திடாத
இறையருள்தான் வேண்டுகின்றேன்!