Monday, 3 March 2014

பாசப்  பறவைகள்  !


அப்பா   அம்மா    என்றழைத்து

அன்பைப்   பொழிந்த   செல்வங்களின்

பாச   வெள்ளத்தில்   தத்தளித்தோம்

பாரில்    உள்ளவரை     என்றும் நினைத்திருப்போம் !



பளிச்செனப்   பாத்திரம்   துலக்கிய   தென்ன !

பாங்குற   வீட்டைப்   பெருக்கிய   தென்ன !

பணிவுடன் பேசிஎமை   பரவசப்   படுத்திய 

தென்ன !     என்ன !      என்ன !



ஆட்டத்தில் வீட்டை அதிரவைத்த  தென்ன !

பாட்டுக்கு பாட்டால்  பதிலளித்த   தென்ன !

உரிமையாய்  வீட்டிலெங்கும்   உலாவித்  திரிந்த

தென்ன !   என்ன !   என்ன !



பெற்றுவிட்டோம்   பிள்ளைகள்   இரண்டையுமே

பெண்ணாக   எனநினைத்து    ஓர்நாளும் 

கண்கலங்கி   நின்றதில்லை   இன்றுவரை !

கணநேரமும்   தவித்ததில்லை   இதுவரையில் !


ஆனால்?


ஐயிரண்டு  பெண்களைத்தான்  அருகருகில்  பார்த்தவுடன்

ஆசையின்று  பிறக்குதம்மா   ஆழ்மனதின்   அடியினிலே !

மூத்தமகன்   ஒருவனன்று   முன்தோன்றி    இருந்திருந்தால்

மருமகளாய்  மற்றொருமகள்தான்  வந்துவாய்த்  திருப்பாளே !



உங்களைப்போல் பத்துப்பெண்கள் பெற்றிருந்தாலும்

கவலைப்பட ஏதுமில்லை  சத்தியமாக!   -   உலகில்

களிப்புமட்டுந்    தானென்று    கண்டுகொண்டேன் !

செழிப்புடன்   என்றும்வாழ்கவென்று   வாழ்த்துகிறோமே !