Wednesday, 30 January 2013


சங்கீத  மேகம்


அன்புமகளிடம் இரவில்
அலைபேசியில் பேசிடும்போது
தொலைவினிலே பாடல்ஒன்று
காதினிக்க கேட்குமென்று
ஆவலோடு காத்திருந்தேன்!
நேற்றுவரை பார்த்திருந்தேன்!!

சாதகம் செய்கின்றேன்
சங்கீதத்தை என்றுசொல்லி
பாதகப் பொய்சொன்ன
பைங்கிளியைக் கண்டால்நீயும்
மறந்திடாதே எனவுரைத்து
விரைந்துவா மழைமே கமே, 

Monday, 28 January 2013

 நிரந்தரமானது

காவல்துறை சீருடையுடன் ஆய்வாளர்கள் இருசக்கர வாகனத்தில்
எதிர்ப்படும்போதெல்லாம் உடைந்து நொறுங்கி விழும் மனதை
தூக்கி எடுத்து தூசி தட்டி நடக்க வைக்க பெரும்பாடு படுகின்றேன்,
அப்பாயிண்மென்ட் ஆர்டர் கிடைத்தும் சேரமுடியாமல் செய்த
விதி கொடுத்த வலி மட்டும் நிரந்தரமானதுதான் மிச்சம்

பாடிப் பரவசப்படுத்தும் குயில்கள்

ஆடி அகமகிழவைக்கும் மயில்கள்


பார்க்குமிடமெங்கும் பசுமைபடர் சோலைகள்


துள்ளும் மீன்கள்நிறை தாமரைத் தடாகங்கள்


பவனிவர பாய்ந்து செல்லும்


பளிங்குக் குதிரைக்காய்


காத்திருந்தேன் காத்திருந்தேன்


கர்வமுடன் காத்திருந்தேன்


வந்துநின்ற ஒட்டகத்தை


வாய்மூடாமல் பார்த்துநின்றேன்!


இப்போதுதான் புரிந்தது !


பாலைவனப் பயணத்திற்கு


பட்டு டுத்திய புரவி எதற்கு?