Wednesday, 13 March 2013



இதய தெய்வம்!

காலையில் எழுந்தவுடன் உன்
கண்ணாடியைத் தேடித் தருகின்றேன்
கவலைப்படாதே கண்ணே!
நான்உனக்கு
இன்னுமொரு கண்தான்
காலம் முழுவதும்!

பள்ளிக்குச் சென்றபின்
அலைபேசியில் ஆணையிடுகிறாய்
சிலிண்டரை மூடச்சொல்லி
கவலைப்படாதே கண்ணே!
நான்உனக்கு
இன்னுமொரு கைதான்
காலம் முழுவதும்!

பள்ளிக்கு தாமதமாகிறது
புறப்படவேண்டும் உடனே என்கிறாய்
மிதிவண்டியை எடுக்கிறேன்
கவலைப்படாதே கண்ணே!
நான் உனக்கு
இன்னுமிரு கால்கள்தான்
காலம்முழுவதும்!

ஈதெல்லாம் ஓன்றுமில்லை!
இயம்புதற்கு பெரிதும் இல்லை!
கணந்தோறும் என் நலனை
காக்கவே துடித்திடும் என்
இன்னுமொரு இதயமாய்
இம்மண்ணுலகில் நீ
இருக்கும்போது!!