Wednesday, 17 October 2012

அன்னையின் மறைவு


அன்புத் தேவதையே !


நீ மறைந்துவிட்   டாயென    நினைக்கையிலே


என்னுள்    இரத்தஅலைகள் கொந்    தளிக்கின்றது -


மனக்   கப்பல்நடுவே    தத்    தளிக்கின்றது,




பாசம் - வற்றாத   ஜீவ நதியே !


வாழ்க்கை   பருவத்தே   பெய்திட்ட   மா    மழையே !


குணக்   குன்றாக   வாழ்ந்திட்ட    அன்னையே !


மன நினைவெல்லாம்  என்நலனை எண்ணியே, - 
உயிரே !

நீ மறைந்துவிட்டாயென   நினைக்கையிலே

என்னுள்    இரத்தஅலைகள் கொந்    தளிக்கின்றது -


மனக்   கப்பல்நடுவே    தத்    தளிக்கின்றது,




ஓர்பத்து    மாதங்கள்    வைத்திருந்தாய்     -    மனதில்


எத்தனை   ஆண்டுகள்    சுமந்திருந்தாய்     -    இனி


அன்புச்   சிம்    மாசனத்தில்     அமர்த்திவைத்து


அருகிருந்து  அகமகிழ பார்க்க நினைத்தால்       -        
இன்றோ

நீ   மறைந்துவிட்டாயென    நினைக்கையிலே

என்னுள்    இரத்தஅலைகள் கொந்    தளிக்கின்றது -


மனக்   கப்பல்நடுவே    தத்    தளிக்கின்றது,





தோல்வியிலே துவண்டிடாமல் தோள் கொடுத்தாய் !


வேதனையில் வீழ்ந்திடாமல் விவேகம் அளித்தாய் !


மடிமீது    தலைவைத்து   ஆறுதல் பெற்றேன்!


தலைமீது இடியிறங்கினும் தாங்கிக் கொண்டேன்,       இன்றோ, -- 


நீ மறைந்து விட்டாயென   நினைக்கையிலே

என்னுள்    இரத்தஅலைகள் கொந்    தளிக்கின்றது -


மனக்   கப்பல்நடுவே    தத்    தளிக்கின்றது.




- - - - --- - --- --- - - - - -- - - - - - - - - - -- -- -- -- - - - - -- - - - - - - -- -- - -- - -- - - - - - -- --- - --- -- - -



அன்னையின்     மறைவெனும்     ஆற்றொணா       இழப்பினால்


அன்றாடம்     மனதினிலே     ஆயிரம்      சவுக்கடிகள்


ஆனாலும்      உனதினிய     ஆறுதல்      சொல்மலர்கள்


அடிபட்ட     இடத்திலிடும்    மென்மையான    ஒத்தடங்கள்



திருவிழா மகிழ்ச்சியிலே திரளான கூட்டத்திலே


தாயினைப்    பிரிந்துவிட்டு    தனக்கும்வழி      தெரியாமல்


தத்தளிக்கும்   சிறுவனைப்போல்   தவிக்கின்றேன்  புலம்புகின்றேன்
!



ஏன் வந்தோம்      இங்கு ?      எதற்கினியும் வாழ ?


எண்றெண்ணி நானும்     ஏங்குகின்றேன்     நிதமும் !


கண்ணீரில்   புள்ளி வைத்து     வாழ்வதென்ன    கோலமிங்கு !


 

1 comment: