Monday, 12 August 2019



அன்பு தேவதை !

எங்கிருந்தோ வந்தாள்

அங்கிள் என்று எனை அழைத்தாள்

இங்கிவளை நான் பெறவே

என்ன தவம் செய்துவிட்டேன் - ஸ்ரீநிவி

எங்கிருந்தோ வந்தாள்!


சைக்கிளில் சென்றால்தான் - வகையாய்

சாப்பிடவே முடியும் - தினமும்

வாக்கிங் சென்றால்தான் - நலமுடன்

வாழவே முடியும் என்று

கடவுள் தந்த வாழ்க்கையிது

கண்ணிரின் பாதை யது

ஆயிரம் கவலைகள்

அடிமனதை அரித்தாலும்

அங்கிள் என நீ அழைத்து

அருகினில் வரும்போது

ஆதவனைக் கண்ட வெண்பனிபோல்

அனைத்துமே மறையுதம்மா!



விதவிதமாய் உடையணிவாய் - அதை

வீட்டில் வந்து காட்டிடுவாய்!

அழகு நீ என்றதுமே

ஆனந்தப் புன்னகையால் எமை

அடிமையாக்கி அகம் மகிழும்

அன்புத் தேவதை நீ!!


உனக்கென்ன ஸ்ரீநிவி !

பாசத்தை மட்டுமே பொழியும் அப்பா !

கனிவுடன் கண்டிப்பு காட்டும் அம்மா !

சில்மிசங்கள் செய்தாலும்

சிரிக்க வைக்கும் அக்கா

பற்றாக்குறைக்கு பாட்டிமார்கள் வேறு

தம்பி தங்கைகள் என

ஆயிரம்பேர் அருகினில் இருந்தாலும்

அங்கிள் என நீ அழைத்து

அருகினில் வருவதெல்லாம்

ஆண்டவனின் அருளென்று

அனுதினமும் மகிழ்கின்றேன்





















No comments:

Post a Comment