Monday, 12 August 2019



அன்பு தேவதை !

எங்கிருந்தோ வந்தாள்

அங்கிள் என்று எனை அழைத்தாள்

இங்கிவளை நான் பெறவே

என்ன தவம் செய்துவிட்டேன் - ஸ்ரீநிவி

எங்கிருந்தோ வந்தாள்!


சைக்கிளில் சென்றால்தான் - வகையாய்

சாப்பிடவே முடியும் - தினமும்

வாக்கிங் சென்றால்தான் - நலமுடன்

வாழவே முடியும் என்று

கடவுள் தந்த வாழ்க்கையிது

கண்ணிரின் பாதை யது

ஆயிரம் கவலைகள்

அடிமனதை அரித்தாலும்

அங்கிள் என நீ அழைத்து

அருகினில் வரும்போது

ஆதவனைக் கண்ட வெண்பனிபோல்

அனைத்துமே மறையுதம்மா!



விதவிதமாய் உடையணிவாய் - அதை

வீட்டில் வந்து காட்டிடுவாய்!

அழகு நீ என்றதுமே

ஆனந்தப் புன்னகையால் எமை

அடிமையாக்கி அகம் மகிழும்

அன்புத் தேவதை நீ!!


உனக்கென்ன ஸ்ரீநிவி !

பாசத்தை மட்டுமே பொழியும் அப்பா !

கனிவுடன் கண்டிப்பு காட்டும் அம்மா !

சில்மிசங்கள் செய்தாலும்

சிரிக்க வைக்கும் அக்கா

பற்றாக்குறைக்கு பாட்டிமார்கள் வேறு

தம்பி தங்கைகள் என

ஆயிரம்பேர் அருகினில் இருந்தாலும்

அங்கிள் என நீ அழைத்து

அருகினில் வருவதெல்லாம்

ஆண்டவனின் அருளென்று

அனுதினமும் மகிழ்கின்றேன்





















Saturday, 11 August 2018




¾¢ÕìÌ ¦ºøÖõ§À¡¦¾øÄ¡õ

«¸ýÈ ¸¡Å¢¡¢¨Âì ¸¡Ïõ§À¡Ð

¸¡Å¢¡¢¨Âì ¸¼ì¸

þÉ¢

µ¼í¸û §Åñ¼¡õ

µð¼¸í¸û ¾¡ý §ÅñÎõ! ±ýÈ

¸Å¢»¦É¡ÕÅÉ¢ý ¸Å¢¨¾¾¡ý

¸ñ½¢ø ¦¾¡¢ó¾Ð


þý§È¡

¸¡ð¼¡üÚ ¦ÅûǦÁÉ

¸¨ÃÒÃñ¦¼¡Îõ

¸¡Å¢¡¢¨Âì ¸¡Ïõ§À¡Ð

ÀÃźò¾¡ø ÁÉõ

À¡Êì ¸Ç¢ì¸¢ÈÐ

±øÄ¡õ ÅøÄ þ¨ÈÅÛ째

±ý¦ÈýÚõ ¿ýÈ¢,


Monday, 3 March 2014

பாசப்  பறவைகள்  !


அப்பா   அம்மா    என்றழைத்து

அன்பைப்   பொழிந்த   செல்வங்களின்

பாச   வெள்ளத்தில்   தத்தளித்தோம்

பாரில்    உள்ளவரை     என்றும் நினைத்திருப்போம் !



பளிச்செனப்   பாத்திரம்   துலக்கிய   தென்ன !

பாங்குற   வீட்டைப்   பெருக்கிய   தென்ன !

பணிவுடன் பேசிஎமை   பரவசப்   படுத்திய 

தென்ன !     என்ன !      என்ன !



ஆட்டத்தில் வீட்டை அதிரவைத்த  தென்ன !

பாட்டுக்கு பாட்டால்  பதிலளித்த   தென்ன !

உரிமையாய்  வீட்டிலெங்கும்   உலாவித்  திரிந்த

தென்ன !   என்ன !   என்ன !



பெற்றுவிட்டோம்   பிள்ளைகள்   இரண்டையுமே

பெண்ணாக   எனநினைத்து    ஓர்நாளும் 

கண்கலங்கி   நின்றதில்லை   இன்றுவரை !

கணநேரமும்   தவித்ததில்லை   இதுவரையில் !


ஆனால்?


ஐயிரண்டு  பெண்களைத்தான்  அருகருகில்  பார்த்தவுடன்

ஆசையின்று  பிறக்குதம்மா   ஆழ்மனதின்   அடியினிலே !

மூத்தமகன்   ஒருவனன்று   முன்தோன்றி    இருந்திருந்தால்

மருமகளாய்  மற்றொருமகள்தான்  வந்துவாய்த்  திருப்பாளே !



உங்களைப்போல் பத்துப்பெண்கள் பெற்றிருந்தாலும்

கவலைப்பட ஏதுமில்லை  சத்தியமாக!   -   உலகில்

களிப்புமட்டுந்    தானென்று    கண்டுகொண்டேன் !

செழிப்புடன்   என்றும்வாழ்கவென்று   வாழ்த்துகிறோமே !

Monday, 20 January 2014


                                                               கனவு  தேசம்

கண்ணீரின் பாதையிலே பயணம் செய்தேன்
     கடவுளை மட்டுமிங்கு நம்பி நடந்தேன்.


உறவினர்கள்  எல்லோரும்  ஓடி  விட்டார்கள்
     நண்பர்கள் அனைவருமே நழுவி விட்டார்கள்
தன்னந்  தனியனாய்க்  காத் திருந்தேன்
    தத்தளிக்கும் மனதுடனே கலங்கி நின்றேன்.


இருளினிலே உட்  கார்ந்தேன் வெளிச்சமாக
    இயேசு என்னைத் தேடிவந்தீர்  உருக்கமாக
இன்று கானான் தேசமதை  கண்டுகொண்டேன்
    களிப்புடனே கனவுதேசத்தில் வாழப்போகிறேன்!     

Tuesday, 1 October 2013



கவிமதி

மேகங்கள் இடைப் படலாம்
மின்னலால் தடைப் படலாம்
கவின்மிகு நிலவதனை
கண நேரம் தவிர்த்திடலாம்
கார்முகிலை புறந்தள்ளி
களிப்புடனே முகம்காட்டும்-இனி
கவிதைநிலா இணையத்திலே!

இரவின் இருளினிலே
இனிமை தரும் நிலவு
துன்பக் கடலினிலே
தோணியாய் துணை நிலவு!
சந்தோச தருணங்களில்
சங்கீதமாய் கானம்பாடி
எங்கிருந்தாலும் என்னுடனே
இணைந்துவரும் குளிர்நிலவு!
இனிஎன்றும் பிரிந்திடாத
இறையருள்தான் வேண்டுகின்றேன்!

Wednesday, 13 March 2013



இதய தெய்வம்!

காலையில் எழுந்தவுடன் உன்
கண்ணாடியைத் தேடித் தருகின்றேன்
கவலைப்படாதே கண்ணே!
நான்உனக்கு
இன்னுமொரு கண்தான்
காலம் முழுவதும்!

பள்ளிக்குச் சென்றபின்
அலைபேசியில் ஆணையிடுகிறாய்
சிலிண்டரை மூடச்சொல்லி
கவலைப்படாதே கண்ணே!
நான்உனக்கு
இன்னுமொரு கைதான்
காலம் முழுவதும்!

பள்ளிக்கு தாமதமாகிறது
புறப்படவேண்டும் உடனே என்கிறாய்
மிதிவண்டியை எடுக்கிறேன்
கவலைப்படாதே கண்ணே!
நான் உனக்கு
இன்னுமிரு கால்கள்தான்
காலம்முழுவதும்!

ஈதெல்லாம் ஓன்றுமில்லை!
இயம்புதற்கு பெரிதும் இல்லை!
கணந்தோறும் என் நலனை
காக்கவே துடித்திடும் என்
இன்னுமொரு இதயமாய்
இம்மண்ணுலகில் நீ
இருக்கும்போது!!

Thursday, 7 March 2013



பிரியமுள்ள எதிரியே!

பிறக்குமுன்னர் உனக்குத் தேவன்
பெயரிட்டாரே டாரதி என்று
தேவனுக்கு என்றும் துதிசொல்லி
தூய வாழ்வு வாழவேண்டி!

இளந்தளிராய்நீ இருக்கும் போதே
பிஞ்சுக்கரங்களால் ஆர்வமுடன் - பாட
புத்த கத்தின் பக்கங்களை
புரட்டுவாய் அழகுற அன்றேநீ!


ABCD சொல்லித் தந்தேன்
திரும்பநீ மகளே சொல்லும்போது
மறந்துதான் வாய்தடு மாறும்போது
சொல்லிக் கொடுக்க முயற்சித்தால்
நீசொல்லாதே என்று சொல்லி
நிலைதடு மாற வைத்திடுவாய்!

முதன்முதல் வாக்கியம் சொந்தமாக
பேசிவிட்டாளே என மகிழ்ந்தேன்
இப்போதும் எது சொன்னாலும்
அதையே தானே சொல்லுகின்றாய்!
என்ன செய்வேன் பெண்ணேநான்!

புள்ளிமானாய் துள்ளிய உன்னை
ஃபோட்டோஎடுக்கக் காசில்லை - ஆனால்
எக்ஸ்ரே எடுக்க நேர்ந்ததைஎண்ணி
இன்றும் நான்மனம் கலங்குகின்றேன்,

கடவுள் தந்த சுதந்திரமே!
கரும்பே தேனே கனிரசமே!
இறைவன் இயேசுவின் பாதம்தனை
இறுகப் பிடித்து வாழ்விலென்றும்
இணையில்லா ஆசிர் பலபெற்று
என்றும் வாழ்க இன்புறவே!!